வணக்கம்.....
என்னடா திடீருன்னு இப்படி மாறிட்டேன்னு ஆச்சிரியப்படரிங்களா..... சும்மா, ஒரு change -க்காக. ஹாய், சொல்லாம கைகூப்பிட்டேன்....
Hm...என்னோட cake, cookies எல்லாம் பார்த்திங்களா. அப்படியே பாக்கும் போதே சாப்படனும்ன்னு தோணுதா ??? (இல்லைனாலும் பரவாயில்லை, நான் இப்படி சொல்லிண்டு என் மனச நானே தேத்திக்கறேன்). நேத்து ஒரு item பண்ணினேன் அத இந்த blog முடிச்சிட்டு அப்பறமா post பண்றேன்....
நாம்ம நம்ம trip -க்கு வருவோம்... நாங்க பயந்துண்டே அந்த tent- ல படுக்க போனோம்... முன்னாள் ராத்திரியும் நாங்க சரியா தூங்கல... So, சீக்கிரமாவே எங்களுக்கு தூக்கம் வந்துடுத்து.... திருப்பியும் புலம்பிண்டே (அதே அமெரிக்கா கனடா border பத்திதான், வேற புதுசா ஏதும் இல்ல ) தூங்க போயிட்டோம்.
கஷ்டப்பட்டு டார்ச் லைட்டுல போட்டோ எடுத்தேன், ஆனா clear -ஆ வரல..
நான் நடு ராத்திரி முழுசிண்டேன்... மணி 12.00 இருக்கும், வெளிய நல்லா மழை பெயர சத்தம் கேட்டுது. அது எங்க tent, canvas sheet -ல விழற சத்தம் இன்னும் நல்லா கேட்டுது. என்னடா கொடுமை இதுன்னு நினைச்சிண்டே திரிப்பியும் சுவாமிய வேண்டிண்டு படுந்துன்ட்டேன். இன்னொரு கொடுமை என்னனா, சீக்கிரத்துல எனக்கு தூக்கம் வரல....ஆனாலும் கண்ண இருக்கிண்டு தூங்க போயிட்டேன்.
ஒரு 4.00 (3.00 am, CT) மணிக்கு நான், என் ஆத்துக்காரர் ரெண்டு பேருமே எழுந்துட்டோம், மெதுவா சுதர்ஷன் என்ன பண்றான்னு பார்த்தோம், அப்பாட அவன் நல்லா தூங்கிண்டு இருந்தான். வெளிய மழை இல்லாம இருந்தது, நல்லா குளுரித்து...... சந்தோஷமா திருப்பியும் கொர்...கொர்.... (ஹீ ஹீ தூங்கிட்டோம்...)
ஹையா.......... விடிஞ்சிடுத்து. எல்லோரும் ஒரு வழியா 6.30 (5.30 am,CT) மணிக்கு எழுந்துட்டோம். வித விதமான பயத்துல தூங்கினதால இந்த விடியல் எங்க மூணு பேருக்கும் ஒரு energy -ய தந்துத்து. காலைல நல்லா குளுர ஆரம்பிச்சிடுத்து.... எல்லோரும் restroom -க்கு போய் பல்ல தேச்சிட்டு அப்படியே குளிச்சிட்டு வரலாம்ன்னு புறப்பட்டோம். ஆனா அங்க போய் ஏக மனசா குளிக்க வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டோம். (Honestly, அந்த குளுருல அத தவிர எந்த option -உம் எங்களுக்கு இல்ல)
ஒரு அழகான, அமைதியான காலை வேலை, குளிர்ந்த காற்று, இளம் வெய்யில்..... (கவிதை எழத try பண்ணினேன், ஹும்... வரலை). எங்களுக்கு திருப்பியும் எரிய பார்க்கனும்ன்னு ரொம்ப ஆசையா இருந்துத்து.... இன்னிக்கு நாங்க தண்ணில இறங்கினோம். அங்க இருந்த கல்ல தண்ணில போட்டு விளையாடினோம். நிறைய photos எடுத்தோம்.


மனசே இல்லாம அந்த ஏரிக்கரைலேருந்து கிளம்பிட்டோம்.... Tent-க்கு போய் dress- அ மட்டும் மார்தின்ட்டு நல்லா perfume போடுண்டு fresh- ஆயிட்டோம். மணி 9.30 am (8.30 am, CT) நல்லா சாப்ட்டு அந்த பார்க்க கார்லயே ஒரு round வந்தோம். எங்களுக்கு இந்த அழக பார்த்த பிறகு நயகாரா போனோம்ன்னு தோணலை. நாங்க திருப்பியும் "Maid of the mist", "cave of the winds" -attractions போக பிளான் பண்ணதை எல்லாம் drop பண்ணிட்டோம். அந்த falls விட இந்த பார்க்க + tent எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போயிடுத்து.
அங்கேருந்த பக்கத்துல ஒரு மூனு மைல தூரத்துல Fort Niagara -ன்னு ஒரு இடத்துக்கு போனோம். அங்க ஒரு மணி நேரம் பார்த்துட்டு ஊருக்கு திரும்பிட்டோம்.... அப்பாட ஒரு வழியா நயாகரா ட்ரிப் முடிஞ்சிடுத்து.... என்னோட அடுத்த கடைசி episode -ல இந்த fort பத்தியும் நாங்க ஒரு வித்தியாசமான, ஒரு புதுவிதமான ஒரு challenge திருப்பியும் face பண்ணினோம். அத பத்தியும் சொல்றேன்....
OK... BYE, Everybody...
No comments:
Post a Comment
Thanks for visiting :)
All your comments are welcome