Wednesday, September 30, 2009

ரவா தோசை

ஹாய்....
தங்கள் கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் என் நன்றி.........என்ன திருதிருன்னு முழிக்கிறீங்க, யாருமே கமண்ட்ஸ் தரலை???? அதுக்காக என் முயற்சியை கைவிட விரும்பவில்லை.

இதோ உங்களுக்காக என்னுடைய இரண்டாவது வலைப்பதிவு..... இது ரவா தோசை பற்றிய ஒரு சுவையான சம்பவம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என் ஆத்துகாரரும் அவருடைய ஃப்ரெண்டும் ஒரு நாள் நைட் டின்னர்க்கு ரவா தோசை பண்ணாங்க. இங்க பெரிய காமடி என்னனு சொன்னா இந்த ரெண்டு பேருமெ சமையல்கட்டு பக்கம் வந்ததே கிடையாது.....இது தான் முதல் தடவை. ரொம்ப பெரிசா மாவெல்லாம் அரைக்கலை, ஜஸ்ட் எம்.டி.ஆர். இன்ஸ்டன்ட் மிக்ஸ் தோசை மாவில் தான் ட்ரை பண்ணாங்க. இவங்களுக்கு நான்தான் எக்ஸ்பிரிமெண்ட்டல் ராட்.

ரெண்டு பேருக்குமே தோசைப்பத்தி ஒரு ஐடியாவுமில்ல (சாப்பிட தெரியும்). அதுக்குள்ள பயங்கரமா ரூள்ஸ் செட் பண்ணிடாங்க.

  1. நான் அடுப்புகிட்ட வரவே கூடாது
  2. அவங்க எந்த டௌட்டும் என்கிட்ட கேட்க மாட்டாங்களாம்.
(இது மாதிரி ஜாலியா பல குட்டி குட்டி ரூல்ஸ், ஸாரி நான் மறந்துட்டேன்)

முதற்படி -- மாவு கரைத்தல்
முதல் வேலையா ரெண்டுபேரும் சேர்ந்து அந்த பேக்கட்ல இருந்த செய்முறை விளக்கத்தை படிச்சாங்க. என்ன படிச்சாங்கன்னு கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். ஏன்னா..... தண்ணியா ஒரு தோச மாவை கரைச்சி வெச்சிட்டாங்க. என்னையும் அந்த பக்கம் வரவேவிடலை. நான் சம்மத்தா தள்ளி வந்து வேடிக்கை பார்த்துடண்டு மட்டும் இருந்தேன். அழகா, ஜாலியா வீடியோ எடுத்துண்டு இருந்தேன். மை காட், என்னால சிரிப்ப அடக்கவே முடியலை!!!!!!!!!!!!!!!!!! அந்த பேக் இன்ஸ்ட்ரக்ஷன் படி 5 நிமிஷம் கரச்ச மாவை அப்படியே வெச்சிட்டாங்க.

5 நிமிஷம் பிறகு

இவங்க ரெண்டுப் பேரும் தோசையே இன்னும் பண்ணல, அதுக்குள்ள என்னவோ பெரிய மேதை மாதிரி இந்த ரவா தோசைய வித்தியாசமா பண்ணனும் பயங்கர கர்ப்பனையில இருந்தார் என் ஆத்துகாரர் (லைக்.... பிட்சா மாதிரி அதுக்கு மேல உருளை கிழங்கு டாப்பிங்கெல்லாம் பண்ணனும் பார்த்தார்). நல்ல வேளை நான் தப்பிச்சேன்..... அது மாதிரி ஏதும் எனக்கு ரிஸ்க் தரலை.

ஏன்னா ????? தோசமாவை தவாவில் விட்டதுமே மாவு தனியா தண்ணி தனியா பிரிஞ்சிடுத்து.... ஹா...ஹா..ஹா.... என்னால சிரிக்காம இருக்கவே முடியலை. சிரிச்சு சிரிச்சு எங்க மூணு பேருக்கும் வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுத்து, அவ்ளோ சிரிச்சோம் !!!!! (சாரி.... அந்த அழகு தோசை என்கின்ற மாவை நான் போட்டோ எடுக்களை, இல்லைனா உங்களுக்கு அதை காண்பிச்சிருப்பேன்) நான் இந்த தோசைய (மாவை) பற்றி எல்லோர்க்கும் போன் செஞ்சி சொல்லிட்டேன்.

கடைசில அந்த மாவை என்னவோ மேக்கப் பண்ணி திருப்பியும் ட்ரைப் பண்ணாங்க. அடுத்த தோசையும் அவுட். நான் இந்த விளையாட்டுள கலந்துக்கவேயில்லை. தள்ளி நின்து வேடிக்கை மட்டும் பார்த்தேன்.

அந்த தோசமாவுக்கே பொறுக்காம ஒரு வழியா மூணாவது தோசை ஒரளவுக்கு தோசை மாதிரி வந்தது. அப்பாட இப்பதான் ரேண்டு பேருக்கும் அவங்க தோசை மேல நம்பிக்கை வந்தது.


அதுக்கு அப்புறம் இதே மாதிரி ஒரளவுக்கு தோசை ஒழுங்கா வந்தது.

ஷு....ஷு.....ஒரு ரகசியம்.... என் வீட்டுக்கு வந்தீங்கன்னா இந்த வீடியோ பார்க்களாம். எப்ப வரீங்கன்னு முன்னாடியே சொல்லுங்க. அப்பத்தான் நான் இந்த தோசைய ஹீட் செஞ்சி உங்களுக்கு குடுக்க முடியும்.

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நல்ல முயற்சி,
    வாழ்த்துக்கள்
    முதல் தோசை அப்படித்தானே வரும்.டோன்ட் worry.
    பாருங்க 3rd தோசை எவ்ளோ அழகா வந்திருக்கு.
    அடுத்த ட்ரை என்ன?
    keep trying.

    ReplyDelete

Thanks for visiting :)
All your comments are welcome